
திருநங்கைகள்! உண்மையில் ஒரு பாவப்பட்ட ஜந்துக்களா? ஒதுக்கப்பட வேண்டிய உயிர்களா? அவர்கள் மனிதர்களா?
சமீபத்தில் “நினைத்தாலே இனிக்கும்” என்று ஒரு படம் பார்த்தேன், அதில் ஒரு காட்சி என் மனதை நெருடியது, திரையரங்கத்துக்கு நன்பர்கள் மூவர் செல்வார்கள் அவர்களுக்கு அருகில் மூன்று திருநங்கைகள், விளக்குப் போட்டவுடன் அவர்களை பார்க்கிறார்கள் தன் அருகில் திருநங்கைகள் என்று தெரிந்தவுடன் அவர்களுடைய முகம் ஒரு முகம் சிதைந்த தொழுநோயாளியை கண்டதை போல் அருவறுப்பு அடைகிறது. பின்னர் ஒருவரையொருவர் நக்கல் அடித்துக் கொண்டு செல்கிறார்கள். அது அந்த படத்தில் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது(தினிக்கப்பட்ட) காட்சி. இந்த படம் மட்டுமல்ல தமிழ் படங்கள் பலவற்றில் பல முன்னணி இயக்குனர்களும், தன்னை அறிவுஜீவிகளாக அடையாளம் காட்டிக்கொள்ளும் இயக்குனர்களும் இதுபோன்ற வக்கிரமான காட்சிகளைப் படத்தில் தினிக்கிறார்கள், கேட்டால் ”சமூகம் அப்படிதான் பார்க்கிறது” என்று பதில்.
சமூகம் அப்படிதான் பார்க்கிறதா?
அவர்களை ஒதுக்கப்பட்டவர்களாக, விசித்திரமான ஜந்துக்களாக தான் பார்க்கிறது, அவர்களை கண்டால் ஒதுங்குகிறது, தள்ளி நின்று கேலி பேசுகிறது.
தீயினால் சுட்டப்புன் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
யார் ஒருவரையும் நேரடியாக ஆயுதம் கொண்டு தாக்க வேண்டும் என்பதில்லை சமூகத்தின் மொழியில் உள்ள சொற்கள் போதும். நம்முடைய சமூக வழக்கில் அது நிறையவே இருக்கிறது. நன்பர்கள் யாரையாவது கேலி செய்யும் போது அலி, ஒன்பது போன்ற சொற்கள் உபயோகப் படுத்துவது நம் சமூகத்தில் சாதாரனம். கேலி செய்பவருக்கோ கேலிக்கு உள்ளாக்கப்படுபவருக்கோ அது சாதாரனமாக தான் தோன்றும், ஆனால் அதன் உள்ளர்த்தத்தை ஆராய்ந்தால் நன்பர்களை கேலிசெய்வதன் மூலம் திருநங்கைகளை கீழ்த்தரமானவர்களாக நிலை நாட்ட முற்படுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. நம் சமூகத்தில் இருந்து அவர்களை எவ்வளவு தள்ளிவைக்க முடியுமோ அவ்வளவு தள்ளிவைக்கிறோம். நம்மை நியாயப் படுத்துவதற்காக அவர்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறோம் அவை.
1. அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
2. நம்மை கண்டால் வக்கிரமாக நடந்து கொள்கிறார்கள்.
3. பிச்சை கேட்கிறார்கள் தராவிட்டால் ஆபாசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
உண்மை தான் மறுக்கவில்லை, ஆனால் அவர்களின் இந்த செயல்பாட்டிற்கு என்ன காரனம்? யார் காரனம்? சந்தேகமே இல்லை நாமும் நம் சமூகமும் தான். நம்மை போல் அவர்களும் மனிதர்கள் தான் ஏற்று கொள்வதில்லை, அவர்களை நமக்கு சமமாக மதிப்பதில்லை.
குடும்பத்துடன் வாழ்ந்து வரும் அவர்கள் தம்மில் ஏற்படும் மாற்றங்களை உணரும்போது குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுகிறாள். சொந்தபந்தங்களால் புறக்கனிக்கப் பட்டப் பின்பு அங்கு வாழமுடியாமல் வெளியேரி வருகிறாள். செல்லும் இடங்களில் எல்லாம் வீடு கிடைப்பதில்லை, வேலை கிடைப்பதில்லை, யாரும் பழகுவதில்லை, வக்கிரமான எண்ணம் கொண்டோர் அவர்களிடம் தவரான என்னத்தில் நெருங்குகின்றார்கள். அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள தன்னை சுற்றி ஒரு வேளி அமைத்து கொள்கிறார்கள், தன்னை கண்டு அனைவரும் பயம் கொள்ளும்படி நடந்து செல்கிறார்கள். அடுத்து வாழ்வாதாரம்? யாரும் வேலை கொடுக்க முன்வராத சூழ்நிலையில் சிலர் பிச்சையெடுக்கிறார்கள், சிலர் தவரானவர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிடுகிறார்கள்.
திருநங்கைகளிடம் அன்பு காட்டி பாருங்கள், அவர்களை உங்கள் சகோதரிகளாக எண்ணிப் பழகுங்கள், அவர்களைவிட அன்பானவர்களை நீங்கள் பார்க்க இயலாது. அன்புக்காக ஏங்கும் ஜீவன்கள் அவர்கள். அவர்களையும் மனிதர்களாக மதியுங்கள் வேரொன்றும் அவரகள் உங்களிடம் கேட்பதில்லை.
கடைசியாக திரைபடங்களில் உள்ள வக்கிர காட்சிகளுக்கு சமூகத்தின் மீது பழி போடும் இயக்குனர்கள் கவனிக்க. அவர்களின் துன்பங்களை புரிந்துக் கொல்லுங்கள், அவர்களுக்கும் அங்கிகாரம் தாருங்கள். சாமானியர்களாக வாழ நிறைய பேர் முற்படுகிறார்கள் அவர்களுடைய எண்ணங்களை மக்களுக்கு காட்டுங்கள், அவர்களுடைய துன்பங்களை திரையில் காட்டுங்கள்.