நான் இன்றளவும் ஒரு சக இந்திய குடிமகனாகத்தான் வாழ முற்ற்பட்டுக்கொண்டிருக்கிறேன், இந்திய மட்டைபந்து ஆட்டத்தை கண்டு அற்பரிக்கிறேன், தேசிய கிதம் பாடினால் தனிச்சையாக எழுந்து மரியாதையை தருகிறேன், ஏ.ஆர்.ரஹுமனுக்கு புகழ்மாலை சூட்டுகிறேன், நாடு பெருமை அடையும் போதெல்லாம் நானும் பெருமைபடுகிறேன். ஆனால் நம் நாட்டின் வரலாறு சித்தரிக்கபடிருக்கிற விதமும் மதசார்புதன்மையும் எண்ணை ஒருபக்கம் வேதனை படுத்த, தலைமையின் தமிழின விரோத போக்கும் எனை கேள்விகளை எழுப்ப சொல்கிறது.
காவிரி, முல்லை பெரியாறு, ஒகேனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இன்னும் பல பல பிரச்சனைகள் ஒன்றாவது தமிழகத்திற்கு சாதகமாக முடிய இந்திய அரசு முயற்சி செய்ததுண்டா?
பாகிஸ்தானில் பஞ்சாபி ஒருவன் சிறை பட்டான் என்ற தகவல் அறிந்ததும் நாடே குக்குரலிட்டது நானும்தான் ஆனால் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுடப்பட்டு அதில் நானுறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே ஏன்?
ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் மட்டுமே இருந்த ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதில் அந்த கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் உடந்தை என்று நிருபிக்கபட்டபின்னும் சரியான விசாரணை நடத்தாமல் புலிகள் தான் காரணம் என்று சப்பைக்கட்டு ஒன்று கட்டிகொண்டு ஈழத்தில் தமிழ்மக்களை கொன்றுகுவிக்கிறது இந்த அரசு. அங்கு செத்துகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் நுற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் உயிரைவிடவும் அந்த கட்சித் தலைவரின் உயிர் எவ்விதத்தில் உயர்வாகப்பட்டது?
தமிழகத்தில் ஈழப் போராட்டத்திற்காக இத்தனை உயிர்த் தியாகங்கள் இத்தனை ஓலக் குரல்கள் எழுந்து கொண்டிருக்கும் பட்ச்சத்தில் தொடர்ந்து அதை எல்லாம் சட்டைசெய்யாமல் சிங்களத்த்ற்கு நேரடி ஆதரவும் ஆயுதவுதவியும் செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு.
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பிற்றிக்கொண்டு தமிழர்களின் கருத்துரிமையை பறிக்கிறது, தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதராவாக பேசுவது தவிறில்லை என்று நீதிமன்றமே தீர்ப்பு கூறிய பிறகும் தொடர்ந்து ஆதரவாளர்களை கைது செய்வது பிறகு விடுவிப்பதுமாக உள்ளது.
இதற்கெல்லாம் மகுடம் சுட்டினாற்போல் மிகப்பெரிய அவலம் இந்த போலி ஜனநாயக நாட்டின் பாரளுமன்றம் அருகில் போரடுவதர்கேன்றே ஒரு இடத்தை ஒதிக்கிவைத்து யார் வேண்டுமானாலும் அங்கு வந்து போராடலாம் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று இருப்பது, அந்த இடத்தில் ஒரு சமூகத்தினர் 1993 இல் இருந்து அமர்ந்து இருக்கிறார்கள் அனைத்து பிரதமருக்கும் கடிதம் எழுதி விட்டார்களாம் இருந்தும் ஒரு அரசு அதிகாரி கூட அவர்களை சந்தித்து பேசவில்லை. இதையெல்லாம் ஓரம் வைத்துவிட்டு என்னை ஒரு இந்தியன் என்றுதான் பார்த்தேன் என்னகொடுமை மற்ற மாநிலத்தவர் யாவரும் எனை தமிழனாக அல்லவே பார்கின்றனர் நான் என்ன செய்ய சொல்லுங்கள்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக